ஸ்ரீரங்கம் கோயில் தலைமை அர்ச்சகரின் மனைவி வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்து பண மோசடி

அடை​யாளம் தெரி​யாத சைபர் கும்​பல் மீது புகார்
ஸ்ரீரங்கம் கோயில் தலைமை அர்ச்சகரின் மனைவி வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்து பண மோசடி
Updated on
1 min read

திருச்சி: ஸ்ரீரங்கம் கோயில் தலைமை அர்ச்​சகர் சுந்​தர் பட்​டரின் மனை​வி​யின் வாட்​ஸ்​அப் கணக்கை ஒரு கும்​பல் ஹேக் செய்து ரூ.1 லட்​சம் வரை பணம்​பெற்று மோசடி செய்​துள்​ளது.

ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோயில் தலைமை அர்ச்​சக​ரான சுந்​தர் பட்​டரின் மனை​வி​யின் வாட்​ஸ்​அப் கணக்கை அடை​யாளம் தெரி​யாத சைபர் மோசடி கும்​பல் ‘ஹேக்’ செய்து அவரது வாட்​ஸ்​அப் கணக்கு மூலம் நண்​பர்​கள், உறவினர்​கள் உள்​ளிட்​டோருக்கு அவசர தேவைக்கு பணம் தேவை என கேட்​டுள்​ளனர்.

இதைத்​தொடர்ந்​து, சிலர் சுந்​தர் பட்​டரை தொடர்பு கொண்டு கேட்​ட​போது​தான், இந்த முறை​கேடு வெளிச்​சத்​துக்கு வந்​தது. இதையடுத்​து, திருச்சி சைபர் கிரைம் போலீ​ஸில் சுந்​தர் பட்​டர் நேற்று முன்​தினம் புகார் அளித்​துள்​ளார்.

இதுகுறித்து சுந்​தர் பட்​டர் கூறியது: எனது மனை​வி​யின் வாட்​ஸ்​அப் கணக்​கில் இருந்து பணம் கேட்டு குறுஞ்​செய்தி வந்​த​தால், பலரும் என்னை தொடர்பு கொண்டு எவ்​வளவு பணம் வேண்​டும் என விசா​ரித்​தனர். அப்​போது​தான் ஏதோ மோசடி நடை​பெறு​வதை உணர்ந்​து, நாங்​கள் யாரிட​மும் பணம் கேட்டு குறுஞ்​செய்தி அனுப்​ப​வில்​லை. யாரும் பணம் அனுப்ப வேண்​டாம் என ஒவ்​வொரு​வரை​யும் அழைத்​துத் தெரி​வித்​தேன். ஆனால், அதற்​குள் 3 பேரிடம் ரூ.1 லட்​சத்தை அந்த மோசடி கும்​பல் வங்​கிக் கணக்கு மூலம் பெற்​று​விட்​டனர். இதுகுறித்து போலீ​ஸில் புகார் அளித்​துள்​ளேன் என்​றார்​.

ஸ்ரீரங்கம் கோயில் தலைமை அர்ச்சகரின் மனைவி வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்து பண மோசடி
“மைலேஜ் குறைந்துவிட்டது” - E20 பெட்ரோல் கொள்கைக்கு எதிராக டெல்லியில் போராட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in