சென்னையில் இலங்கை இளம்பெண் கார் ஏற்றிக் கொலை: பாரில் நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறால் விபரீதம்

மாணவர்கள் உட்பட 3 பேரை கைது செய்தது போலீஸ்
யான்சி, பாலகுரு, கிஷோர் குமார்,ஜோஷ்வா

யான்சி, பாலகுரு, கிஷோர் குமார்,ஜோஷ்வா

Updated on
2 min read

சென்னை: சென்னை கோயம்​பேட்​டில் மது​பான பாரில் நடனம் ஆடும்​போது இரு தரப்​பினரிடையே ஏற்​பட்ட தகராறில், இலங்கை இளம்​பெண் கார் ஏற்றி கொலை செய்​யப்​பட்​டார். இந்​தச் சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்தி உள்​ளது.

சென்னை கோயம்​பேட்​டில் பிரபல நட்​சத்​திர ஓட்​டல் ஒன்று உள்​ளது. அதன் உள்​புறம் உள்ள மது பாரில் நேற்று முன்​தினம்​இரவு 11 மணி​யள​வில் இரு தரப்​பினர் மது அருந்​தினர். அப்​போது, அவர்​களுக்​குள் நடன​மாடு​வ​தில் தகராறு ஏற்​பட்​டது. சிறிது நேரத்​தில் இரு தரப்​பினரும் ஒரு​வர் மீது ஒரு​வர் சரமாரி​யாக தாக்​கிக் கொண்​டனர்.

அங்​கிருந்த பவுன்​சர்​கள் இரு தரப்​பினரை​யும் உடனடி​யாக வெளி​யேற்​றினர். ஆனால் வெளி​யில் வந்​தும் இருதரப்​பினரும் மோதலில் ஈடு​பட்​டனர். அவர்​களைப் பவுன்​சர்​கள் மீண்​டும் விலக்கி எச்​சரித்து அனுப்​பினர். இந்த மோதலால் நள்​ளிர​வில் மது​பார் மூடப்​பட்​டது. மோதலில் ஈடு​பட்​ட​வர்​களில் ஒரு தரப்​பினர் 3 பைக்​கு​களில் அங்​கிருந்து அடுத்​தடுத்து புறப்​பட்​டனர். மற்​றொரு தரப்​பைச் சேர்ந்​தவர்​கள் தாங்​கள் வந்த சொகுசு காரில் கிளம்​பினர்.

கோயம்​பேடு பாலத்​துக்கு கீழே (கோ​யம்​பேடு - திரு​மங்​கலம் செல்​லும் வழி) சென்று கொண்​டிருந்த போது ஏற்​கெனவே தகராறில் ஈடு​பட்டு முன்​னால் பைக்​கில் சென்​றவர்​களில் ஒரு தரப்​பினர் கற்​களை வீசி தாக்​குதலில் ஈடு​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இது காரில் வந்​தவர்​களுக்கு ஆத்​திரத்தை ஏற்​படுத்தி உள்​ளது.

இதையடுத்​து, சொகுசு காரை அதிவேக​மாக ஓட்டி எதிர்​தரப்​பினர் மீது மோதினர். இதில், இரு சக்கர வாக​னத்தை ஓட்​டிச் சென்ற 18 வயது இளம்​பெண் தூக்கி வீசப்​பட்டு சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார். பின்​னால், அமர்ந்​திருந்த 17 வயது சிறுமிக்​கும் பலத்த காயம் ஏற்​பட்​டது. இதையடுத்​து, கொலை​யாளி​கள் அங்​கிருந்து மின்​னல் வேகத்​தில் தப்​பினர்.

நள்​ளிர​வில் நடை​பெற்ற இந்த சம்​பவம் அந்த பகு​தி​யில் பெரும் பதற்​றத்தை ஏற்​படுத்​தி​யது. தகவல் அறிந்து கோயம்​பேடு பேருந்து நிலைய போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்று உயி​ரிழந்த பெண்​ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்​காகக் கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். காயம் அடைந்த சிறுமியை​யும் அதே மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். தடய​வியல் நிபுணர்​கள் சம்பவ இடத்​தில் தடயங்​களைச் சேகரித்​தனர்.

போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தினர். இதில், உயி​ரிழந்த பெண் யான்சி (18) என்​பதும், விழுப்​புரம் மாவட்​டம் அனிச்​சம் குப்​பத்​தில் (இலங்கைத் தமிழர்​மறு​வாழ்வு முகாம்) வசித்​ததும், கடந்த 19-ம்​தே​தி, திரு​வள்​ளூர் மாவட்​டம் கொண்​டஞ்​சேரியைச் சேர்ந்த தோழி தம்​பிதா என்​பவர் மூலம் அறி​முக​மான, சென்னை ராமாபுரத்​தில் வசிக்​கும் மற்​றொரு தோழி​யான பவுசி தீபி​காவை (17) பார்க்க வந்​ததும் தெரிந்​தது.

பின்​னர், கடந்த 10 நாட்​களாக அவரது வீட்​டிலேயே யான்சி தங்​கி​யுள்​ளார். இந்​நிலை​யில்​ தான் 28-ம் தேதி மாலை சினி​மாவுக்கு செல்​வ​தாகக் கூறி வெளியே சென்று மறு​நாள் காலைவீட்​டுக்கு வந்​தவர்​களைச் சிறுமி​யின் தாய் கண்​டித்​துள்​ளார். இதனால், கோபித்​துக் கொண்டு இரு​வரும் வீட்டை விட்டு வெளி​யேறி உள்​ளனர்.

பின்​னர், தங்​களது இன்​ஸ்​டாகி​ராம் நண்​பர்​கள் உள்பட 6 பேர் சம்​பவத்​தன்று மது​பாருக்கு சென்​றுள்​ளனர். அப்​போது ஏற்​பட்ட தகராறில் யான்சி கார் ஏற்​றிக் கொலை செய்​யப்​பட்​டுள்​ளார். யான்சி இலங்கை தமிழர் எனவும், பல ஆண்​டு​களுக்கு முன்​னர் இலங்​கை​யில் நடை​பெற்ற உள்​நாட்டு பிரச்​சினை​யால் அவரது குடும்​பத்​தினர்​ தமிழகத்​தில்​ தஞ்​சம்​ அடைந்​த​தாக​வும்​ போலீ​ஸார்​ தெரி​வித்​தனர்​.

4 பேரிடம் விசாரணை: சிசிடிவி கேமரா காட்​சிகள் அடிப்​படை​யில் போலீ​ஸார் வி​சா​ரணை நடத்​தினர். யான்​சி​யை கார்ஏற்றி கொலை செய்​தது தொடர்​பாக அரும்​பாக்​கத்​தைச் சேர்ந்த பால​குரு (21), சூளைமேட்​டைச் சேர்ந்த கல்​லூரி​ மாணவர் ஜோஷ்வா (19), பி.இ. மாணவர் நெற்​குன்​றம் கிஷோர்​கு​மார் (19) ஆகிய 3 பேரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

விரு​கம்​பாக்​கத்​தைச் சேர்ந்தபி.டெக். மாணவர் சுமந்த் சக்​திவேல் (21), ரா​மாபுரத்​தைச் சேர்ந்த பி.​காம். மாணவர் மோகன சுந்​தரம் (19), அண்ணா நகரைச் சேர்ந்தடிப்​ளமோ மாணவர் ராகுல் (20), சூளைமேட்​டைச் சேர்ந்த விமல் (19) ஆகிய மேலும் 4 பேரிடம் விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இவர்​கள் தி​முக ஆதர​வாள​ரான சுமன் சக்​திவேல் என்​பவருக்கு சொந்​த​மான தி​முக கொடி கட்​டிய காரில் மது​பாருக்கு சென்​றதும் தெரியவந்தது.

தாய் கதறல்: யான்சி கொலை செய்​யப்​பட்ட தகவல் அறிந்த தாய் மேரி ஸ்டெல்லா கீழ்ப்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் கண்​ணீருடன் கூறும்​போது, ‘‘ என் மகள் கொலைக்கு நீதி வேண்​டும். என் பிள்​ளை​யைக் கொலை செய்​தவனை முதல்​வர் விஜய் தூக்கிலிட வேண்​டும். இல்லை என்​றால் துப்​பாக்கி கொடுங்​கள். கொலை​யாளியை நானே கொன்​று​விட்டு சிறைக்​குச் செல்​கிறேன்​’’ என்​று கூறி​னார்​.

<div class="paragraphs"><p>யான்சி, பாலகுரு, கிஷோர் குமார்,ஜோஷ்வா</p></div>
குஜராத்தை வீழ்த்தி மீண்டும் சாம்பியனாக மகுடம் சூடியது ஆர்சிபி | IPL Final

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in