கோப்புப் படம்

கோப்புப் படம்

நெய்வேலியில் போலீஸாரை வெட்டிய ரவுடி சுட்டுப்பிடிப்பு

Published on

விருத்தாசலம்: அடிதடி வழக்​கில் தலைமறை​வாக இருந்த ரவுடியைப் பிடிக்க முயன்​ற​போது, அவர் போலீ​ஸாரை அரி​வாளால் வெட்​டி​னார். இதையடுத்​து, போலீ​ஸார் அவரை துப்​பாக்​கி​யால் சுட்​டுப் பிடித்​தனர்.

கடலூர் மாவட்​டம் குறிஞ்​சிப்​பாடியைச் சேர்ந்த ரமேஷ் (50) என்​பவர் காய்​கறிக் கடை நடத்தி வரு​கிறார். அவருக்​கும், நெய்​வேலி மாற்​றுக்​குடி​யிருப்​பைச் சேர்ந்த சுபாஷ்கர் என்​பவருக்​கும் முன்​விரோதம் இருந்​துள்​ளது.

இந்​நிலை​யில், ரமேஷ் கடைக்கு நேற்று முன்​தினம் சென்ற சுபாஷ்கர், ரமேஷை அரி​வாளால் வெட்​டி​விட்டு அங்​கிருந்து தப்​பியோடி​னார். இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் புதுச்​சேரி ஜிப்​மர் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார்.

இதையடுத்​து, குறிஞ்​சிப்​பாடி காவல் ஆய்​வாளர் விஜயகு​மார் தலை​மையி​லான போலீ​ஸார் சுபாஷ்கரை தேடி வந்​தனர். அவர் நெய்​வேலி அடுத்த இருப்பு கிராமத்​தில் முந்​திரித்​தோப்​பில் பதுங்​கி​யிருப்​பது தெரிய​வந்​தது. போலீ​ஸார் அங்கு சென்​று, சுபாஷ்கரைப் பிடிக்க முயன்​றனர்.

அப்​போது சுபாஷ்கர் அரி​வாளால் காவலர்​கள் வெங்​க​டா​சாலம், வைத்​தி​ய​நாதன் ஆகியோரை வெட்​டி​னார். மேலும், காவல் ஆய்​வாளரை​யும் தாக்க முயன்​றார். இதையடுத்​து, காவல் ஆய்​வாளர் விஜயகு​மார் சுபாஷ்கரின் காலில் துப்​பாக்​கி​யால் சுட்​டுப் பிடித்​தார்.

பின்​னர், சுபாஷ்கர் மற்​றும் காயமடைந்த காவலர்​கள் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர். சம்பவ இடத்​தில் ஆய்வு மேற்​கொண்ட எஸ்​.பி. ஜெயக்​கு​மார், என்​எல்சி மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரும் காவலர்​கள் வெங்​க​டாசலம், வைத்​தி​ய​நாதனை சந்​தித்து நலம் விசா​ரித்​தார். பின்​னர் எஸ்​.பி. செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “ரவுடி சுபாஷ்கர் மீது கொலை முயற்​சி, கொள்​ளை, ஆள்​கடத்​தல் என 9 வழக்​கு​கள் நிலு​வயைில் உள்​ளன” என்​றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in