போதைப் பொருள் வழக்கில் நடிகர், நடிகைகளுக்கு தொடர்பா? - சென்னை போலீஸ் விசாரணை

போதைப் பொருள் வழக்கில் நடிகர், நடிகைகளுக்கு தொடர்பா? - சென்னை போலீஸ் விசாரணை
Updated on
1 min read

சென்னை: ​திரு​மங்​கலம் போலீ​ஸாருடன் சென்னை போதைப் பொருள் தடுப்பு நுண்​ணறி​வுப் பிரிவு போலீ​ஸார் கடந்த 19-ம் தேதி திரு​மங்​கலத்​தில் உள்ள பார்க் ரோடு அருகே கண்​காணித்​த​போது அங்கு சந்தேகத்​துக்​கிடமான முறை​யில் நின்றிருந்த பாடியைச் சேர்ந்த தியானேஷ்வரனை (26) பிடித்து விசா​ரித்​தனர்.

அவரிட​மிருந்து போதை ஸ்டாம்ப் பறி​முதல் செய்​யப்​பட்​டது. விசா​ரணையில் தேனாம்​ பேட்​டையை சேர்ந்த சினிமா இணை தயாரிப்​பாள​ரான முகமது மஸ்​தான் சர்​புதீன் என்ற சர்​புதீன் (44), முகப்​பேரைச் சேர்ந்த சீனி​வாசன் (25), வளசர​வாக்​கத்​தைச் சேர்ந்த சரத் (30) ஆகிய 3 பேர் கைது செய்​யப்பட்டனர்.

அவர்​களிட​மிருந்து ரூ.27.91 லட்​சம்​, உயர் ரக கஞ்சா பறி​முதல் செய்​யப்பட்​டன. சர்​புதீன் நடிகர் சிம்​புவின் மேலாளராகப் பணி​யாற்றி உள்​ளார். பல நடிகர்கள், நடிகைகளு​டன் தொடர்​பில் இருந்​தவர்.

இதனால் யாருக்​கெல்​லாம் போதைப் ​பொருள் வழங்கினார் என்​பது தொடர்​பாக விசா​ரிக்க சர்புதீனை போலீ​ஸார் அண்மை​யில் காவலில் எடுத்து விசா​ரித்​தனர்.

எந்​தெந்த சினிமா விருந்​துகளில் போதைப் பொருட்​கள் பயன்​படுத்​தப்பட்​டன? அதில் கலந்து கொண்ட திரை நட்சத்​திரங்​கள் யார்? யார்? என்​பது தொடர்​பாக​வும், சர்புதீனிடம் விசா​ரணை நடத்​தப்​பட்​டு, பட்​டியல் சேகரிக்​கப்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

அதன் அடிப்படை​யில் போதைப் பொருள் பயன்​படுத்திய வழக்​கில் திரைப்பட தயாரிப்​பாளர் தினேஷ் ராஜ்(39) நேற்று முன்தினம் கைது செய்யப்​பட்டார்.

இவர் சினிமா விநி​யோகஸ்​த​ராகவும் உள்ளார். இவர் நடிகர் தனுஷின் சகோ​தரி மகனை வைத்து படம் தயாரித்து வரு​கிறார்.

மேலும், தினேஷ் ராஜிடம் போதைப் பொருட்​களை பெற்று வேறு யாரேனும் பயன்​படுத்​தி​னார்​களா? என்​ற கோணத்​தி​லும்​ போலீ​ஸார்​ வி​சா​ரணையை விரிவுபடுத்​தி​யுள்​ளனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in