விமான நிலைய சுங்கத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: ஆந்திர மாநில முதியவர் கைது

விமான நிலைய சுங்கத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: ஆந்திர மாநில முதியவர் கைது
Updated on
1 min read

சென்னை: ஆந்​திராவின் ரேணி​குண்டாவை சேர்ந்​த சங்​கரையா (73). இவர் சென்னை ஆலந்​தூரில் தங்​கி​யிருந்​தார். இந்​நிலை​யில், கடந்த சில தினங்​களுக்கு முன்பு சங்​கரையா அரசு பேருந்தில் பயணம் செய்​த போது, செல்​போனில் ஒரு வரிடம், “சென்னை விமான நிலையத்​தில் சுங்​கத்​துறை​யில் காலிப் பணி​யிடம் உள்​ளது. முறைப்​படி விண்​ணப்​பித்​தால், நானே வேலை வாங்​கிக் கொடுத்து விடு​வேன்” என்று பேசி​யுள்​ளார்.

இதை அரு​கில் அமர்ந்து கேட்​டுக்​கொண்​டிருந்த தாம்​பரம் மகாலட்​சுமி நகரைச் சேர்ந்த ராமமூர்த்தி என்​பவர், தனது மகள் பொறி​யியல் பட்​ட​தாரி என்​றும், அவருக்கு அந்த வேலை கிடைக்​கு​மா? என்​றும் கேட்​டுள்​ளார்.

அதற்கு சங்​கரை​யா, “விண்​ணப்​பப் படிவத்​துக்கு ரூ.2,500, எனக்கு ரூ.500 என மொத்​தம் ரூ.3,000 கொடுத்​தால் வேலைக்கு ஏற்​பாடு செய்து தரு​கிறேன்” என்று கூறி​யுள்​ளார். இதை நம்​பிய ராமமூர்த்​தி, ரூ.3,000-ஐ சங்​கரை​யா​விடம் கொடுத்​துள்​ளார்.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் காலை சங்​கரையா மீண்​டும் ராமமூர்த்​தியை செல்​போனில் தொடர்பு கொண்​டு, விண்​ணப்​பப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுப்​பதுடன், சுங்​கத்​துறை அதி​காரி​களுக்கு ரூ.65,000 கொடுக்க வேண்​டும் என்றார்.

இதையடுத்து ராம மூர்த்தி ரூ.65 ஆயிரம் பணத்​துடன் விமான நிலைய வளாகத்​தில் உள்ள மெட்ரோ ரயில் நிலை​யத்​துக்கு சென்​றார். அங்கு சங்கரையா​வின் நடவடிக்​கை​யில் சந்தேகம் அடைந்த ராமமூர்த்​தி, அவரை பிடித்து சென்னை விமான நிலைய காவல் நிலை​யத்​தில் ஒப்​படைத்​தார்.

போலீ​ஸ் விசா​ரணையில், விமான நிலை​யத்​தில் வேலை வாங்​கித் தரு​வ​தாக கூறி பணம் வசூலித்து மோசடி செய்​வதை வழக்​க​மாக கொண்​டிருந்​ததை சங்கரையா ஒப்​புக் கொண்டார். போலீ​ஸார் அவரை கைது செய்​தனர்.

விமான நிலைய சுங்கத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: ஆந்திர மாநில முதியவர் கைது
மாண்டேக் சிங் அலுவாலியா குழு: முதல்வர் விஜய்யுடன் ஆலோசனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in