எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பு போதைப் பொருள் பறிமுதல்

கென்யா நாட்டு இளம் பெண் கைது
எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பு போதைப் பொருள் பறிமுதல்
Updated on
1 min read

சென்னை: சென்னை விமான நிலை​யத்​தில் ரூ.15 கோடி மதிப்​புள்ள கொக்​கைன் போதைப் பொருள் பறி​முதல் செய்​யப்​பட்​டது. எத்தியோப்பியா நாட்​டிலிருந்து கடத்தி வந்த கென்யா நாட்டு இளம் பெண் கைது செய்​யப்​பட்​டார்.

ஆப்​பிரிக்க நாடான எத்​தி​யோப்​பி​யா​வில் இருந்து சென்னை வரும் எத்​தி​யோப்​பியன் ஏர்​லைன்ஸ் பயணி​கள் விமானத்​தில் பெண் ஒரு​வர் கொக்​கைன் போதைப் பொருளை கடத்தி வரவுள்​ள​தாக வரு​வாய் புல​னாய்​வுத் துறை​யினருக்கு ரகசி​யத் தகவல் கிடைத்​தது.

இதையடுத்து அந்த துறை​யின் அதி​காரி​கள், சுங்​கத் துறை அதி​காரி​களு​டன் இணைந்து சென்னை விமான நிலை​யத்​தில் தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்​டிருந்​தனர்.

நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை விமான நிலை​யத்​துக்கு எத்​தி​யோப்​பியா தலை நகர் அடிஸ் அபா​பா​வில் இருந்து விமானம் வந்​தது.

அந்த விமானத்​தில் வந்த பயணி​களை​யும், அவர்​களின் உடைமை​களை​யும் அதி​காரி​கள் தீவிர​மாக சோதனை செய்து அனுப்​பிக் கொண்​டிருந்​தனர். அப்​போது வந்த கென்யா நாட்டை சேர்ந்த 35 வயது பெண் மீது அதி​காரி​களுக்கு சந்​தேகம் ஏற்​பட்​டது.

கென்​யா​வில் இருந்து எத்​தி​யோப்​பியா வழி​யாக சுற்​றுலா விசா​வில் வந்த அந்த பெண்​ணை, சுங்​கத் துறை அலு​வல​கத்​துக்கு அழைத்​துச் சென்று விசா​ரணை நடத்​தினர்.

ஆனால் அதி​காரி​கள் கேட்ட எந்த கேள்வி​களுக்கு அவர் பதில் அளிக்​காமல் அமை​தி​யாக இருந்​தார். அவரது உடைமை​களி​லும் சந்​தேகப்​படும்​படி​யாக எது​வும் இல்​லாத​தால், பெண்ணை விமான நிலைய மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்​று, அவருடைய வயிற்றை எக்​ஸ்ரே எடுத்​துப் பார்த்​தனர். அப்​போது வயிற்​றுக்​குள் அதிக அளவில் கேப்​சூல்​கள் இருந்​தன.

இதையடுத்து மருத்​து​வக் குழு​வினர் உதவி​யுடன் பெண்​ணின் வயிற்​றுக்​குள் விழுங்கி வந்த 70 கேப்​சூல்​களை வெளியே எடுத்​தனர். அந்த கேப்​சூல்​களை உடைத்​துப் பார்த்​த​போது உயர்தர கொக்​கைன் போதைப் பொருள் இருந்​தது.

மொத்​த​மாக ரூ.15 கோடி மதிப்​புள்ள 850 கிராம் கொக்கைன் போதைப்​பொருளை அதி​காரி​கள் அந்த பெண்​ணிட​மிருந்து பறி​முதல் செய்​தனர். இதையடுத்து அந்​தப் பெண்ணை அதி​காரி​கள் கைது செய்து விசா​ரணை நடத்​தினர்.

சர்​வ​தேச போதைப் பொருள் கடத்​தல் கும்​பலுடன் தொடர்​பில் இருக்​கும் அந்​தப் பெண்​ணிடம், சென்​னை​யில் யாரிடம் கொடுப்​ப​தற்​காக போதைப் பொருளை கடத்தி வந்​தார்​ என்​று வி​சா​ரித்து வருகின்​றனர்​.

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பு போதைப் பொருள் பறிமுதல்
அரசியலமைப்புச் சட்டத்தை முதல்வர் விஜய் மீறிவிட்டதாக டிஜிபியிடம் ஆர்.எஸ்.பாரதி புகார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in