

சென்னை: விழுப்புரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (21). கோயம்பேடு பூ மார்க்கெட்டில் வேலை செய்கிறார்.
கடந்த 11-ம் தேதி இரவு விருகம்பாக்கம் ஆவிச்சி பள்ளி அருகே நின்றுகொண்டு, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனங்களை மறித்து கோயம்பேடு செல்ல லிஃப்ட் கேட்டார்.
அப்போது அங்கு பைக்கில் வந்த 2 பேர் ஆறுமுகத்தை கோயம்பேட்டில் இறக்கி விடுவதாகக் கூறி அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை தாக்கி கத்திமுனையில் அவரிடமிருந்த பணம், செல்போனை பறித்து தப்பினர்.
இதுதொடர்பாக ஆறுமுகம், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், செங்குன்றம் பாடியநல்லூரைச் சேர்ந்த விஜய்பிரசாத் (27) என்பவரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியைத் தேடி வருகின்றனர்.