இளைஞர் உயிரிழப்புக்கு போதை ஊசி காரணமா? - கொடுங்கையூர் போலீஸார் விசாரணை

இளைஞர் உயிரிழப்புக்கு போதை ஊசி காரணமா? - கொடுங்கையூர் போலீஸார் விசாரணை
Updated on
1 min read

சென்னை: ​கொடுங்​கையூரில் இளைஞர் உயி​ரிழப்​புக்கு போதை ஊசி காரண​மா? என போலீ​ஸார் விசா​ரிக்​கின்​றனர்.

கொடுங்​கையூர், முத்​தமிழ்​நகரை சேர்ந்​தவர் கிரு​பாகரன் (28). பாரி​முனை​யில் உள்ள தனி​யார் நிறு​வனம் ஒன்​றில் பணி செய்து வந்​தார். போதைப் பழக்​கத்​துக்கு அடிமை​யானவர் எனக் கூறப்​படு​கிறது.

கடந்த 5 மாதங்​களாக வேலைக்​குச் செல்​லாமல் இருந்​துள்​ளார். நேற்று முன்​தினம் வீட்​டில் தனி​யாக இருந்த அவர் திடீரென மயங்கி விழுந்​தார். இதைப் பார்த்த அவரது மனை​வி, பக்​கத்து வீட்​டினர் உதவி​யுடன் கணவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்​றார்.

அங்கு அவரை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், கிரு​பாகரன் ஏற்​கெ​னவே இறந்​து​விட்​ட​தாக தெரி​வித்​தனர். இதுகுறித்​து கொடுங்​கையூர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரணை நடத்​தினர்.

முதல் கட்​ட​மாக, கிரு​பாகரன் வீட்​டில் போலீ​ஸார் சோதனை செய்​தனர். அப்​போது, அங்கு பயன்​படுத்​திய ஊசி, போதை மாத்​திரைகள் இருந்​தது தெரிய​வந்​தது.

இதனால், கிரு​பாகரன் போதை மாத்​திரைகளை தண்​ணீரில் கலந்து ஊசி மூலம் உடலில் செலுத்​தி​ய​தில் உடல்​நலக்​குறைவு ஏற்​பட்டு உயி​ரிழந்​தா​ரா என்று விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே காரணம் தெரிய​வரும் என்று போலீஸார் கூறினர்.

இளைஞர் உயிரிழப்புக்கு போதை ஊசி காரணமா? - கொடுங்கையூர் போலீஸார் விசாரணை
ஐஏஎஸ் அதிகாரியின் விருப்ப ஓய்வில் முறைகேடு: அசல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in