சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கைதான தலைமைக் காவலர் பணிநீக்கம்: சென்னை காவல் ஆணையர் உத்தரவு

வேலப்பன்

வேலப்பன்

Updated on
1 min read

சென்னை: சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடு​பட்​ட​தாக கைதான தலை​மைக் காவலரை பணிநீக்கம் செய்து சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உத்​தர​விட்​டுள்​ளார்.

கன்​னி​யாகுமரி மாவட்​டம் நாகர்​கோ​விலை சேர்ந்த 16 வயது சிறு​வன் (11-ம் வகுப்பு மாணவன்) கடந்த 25-ம் தேதி தனது பெற்​றோருடன் சென்னை கோடம்​பாக்​கத்​தில் உள்ள உறவின​ரான குமரேசன் (39) என்​பவரது வீட்​டுக்கு வந்​திருந்​தார்.

பெற்​றோர் சொந்த ஊருக்கு திரும்​பினர். ஆனால், சிறு​வன் மட்​டும் உறவினர் வீட்​டில் 2 நாள் தங்​கி​யிருந்து வரு​வ​தாக கூறிய​தால் அவரை மட்​டும் அங்கு விட்டு சென்​றனர்.

இந்​நிலை​யில் 27-ம் தேதி இரவு குமரேசன், தனது நண்​ப​ரான சென்னை வடபழனி காவல் நிலைய குற்​றப்​பிரி​வில் தலை​மைக் காவல​ராக பணிபுரி​யும் வேலப்​பன் (35) என்​பவரை வீட்​டுக்கு அழைத்து அவருடன் மது அருந்​தி​னார்.

போதை​யில் இருந்த வேலப்​பன், அரு​கில் தூங்​கிக் கொண்​டிருந்த சிறு​வனை எழுப்பி அவரது வாயில் வலுக்​கட்​டாய​மாக மதுவை ஊற்​றியதோடு, பாலியல் தொந்​தர​வும் கொடுத்​துள்​ளார்.

இதனால், பயமும் அதிர்ச்​சி​யும் அடைந்த சிறு​வன் கத்தி கூச்​சலிட்​டதோடு, அரு​கில் இருந்த டிவி ரிமோட்​டால் வேலப்​பனின் தலை​யில் தாக்​கி​விட்டு வீட்டை வெளிப்​புற​மாக பூட்டி தப்​பி​னார்.

மேலும், அவர் அசோக்​நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்​துக்கு சென்​று, நடந்த சம்​பவத்தை கூறி கதறி அழுதுள்​ளார். இதையடுத்​து, போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்து வேலப்​பனை காவல் நிலை​யம் அழைத்து வந்து விசா​ரித்​தனர்.

இதில், சிறு​வன் கூறிய குற்​றச்​சாட்டு உண்மை என தெரிய​வந்​ததையடுத்​து, வேலப்​பனை போக்சோ உட்பட மேலும் சில பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிந்து நேற்று முன்​தினம் கைது செய்து புழல் சிறை​யில் அடைத்​தனர்.

இதையடுத்​து, அவர் பணி​யிடை நீக்​க​மும் செய்​யப்​பட்​டார். இந்​நிலை​யில், அவரை பணி நீக்​கம் செய்து சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உத்​தர​விட்​டார்.

<div class="paragraphs"><p>வேலப்பன்</p><p></p></div>
கே.கே.நகர், அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் வருடாந்திர இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in