காவலாளியின் செல்போனை திருடி ‘ஜிபே’ மூலம் ரூ.2 லட்சம் எடுத்து மோசடி

பெண் தூய்மைப் பணியாளர்கள் இருவர் உட்பட 3 பேர் கைது
கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை காவலா​ளி​யின் செல்​போனை திருடி ஜிபே மூலம் ரூ.2 லட்​சம் எடுத்து மோசடி செய்த பெண் தூய்​மைப் பணி​யாளர்​கள் இரு​வர் உட்பட 3 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

சென்​னை, ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை வளாகத்​தில் உள்ள ஸ்கேன் சென்​டரில் காவலா​ளி​யாக வேலை செய்து வருபவர் நாகலிங்​கம் (58). கடந்த 25-ம் தேதி வழக்​கம்​போல் பணி​யில் இருந்​தார்.

அப்​போது அவரது செல்​போன் திருடு​போனது. பின்​னர் 2 நாட்​களில் அவரது வங்​கிக்கணக்​கி​லிருந்து ரூ.2 லட்​சம் மாய​மானது. ஜிபே மூலம் பணம் எடுக்​கப்​பட்​டதை அறிந்த நாகலிங்​கம் இது தொடர்​பாக ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை காவல் நிலைய குற்​றப்​பிரி​வில் புகார் அளித்​தார். அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர்.

இதில் செல்​போனை திருடி, ஜிபே மூலம் பணம் எடுத்து மோசடி​யில் ஈடு​பட்​டது சென்னை ஏழுகிணறு பகு​தி​யைச் சேர்ந்த ரேவதி (39), திரு​வொற்​றியூரைச் சேர்ந்த உமா மகேஸ்​வரி (38), வானகரத்​தைச் சேர்ந்த தினேஷ் (41) என்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து 3 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்.

கைது செய்​யப்​பட்ட ரேவ​தி, உமா மகேஸ்​வரி இரு​வரும் ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யில் தூய்​மைப் பணி​யாள​ராக வேலை செய்து வரு​கின்​றனர். இவர்​கள் ஏற்​கெனவே நாகலிங்​கத்​தின் ஜிபே பாஸ்​வேர்டை தெரிந்து வைத்​துக்​கொண்​டு, அவரது செல்​போனை திருடி பணம் எடுத்து மோசடி செய்​துள்​ளனர்.

இவர்​களுக்கு தினேஷ் என்​பவர் உடந்​தை​யாக இருந்​துள்​ளார் என்​பது விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. இதையடுத்து 3 பேரை​யும் போலீ​ஸார்​ சிறை​யில்​ அடைத்​தனர்​.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க பிப்.28-க்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in