ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம்: தட்டிக் கேட்டவர் மீது தாக்குதல்

ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம்: தட்டிக் கேட்டவர் மீது தாக்குதல்
Updated on
1 min read

கிளாம்பாக்கம்: கிளாம்​பாக்​கம் புறநகர் பேருந்து நிலை​யத்​தில் இருந்து பல்​வேறு மாவட்​டங்​களுக்கு அரசு போக்​கு​வரத்து கழக பேருந்​துகள், தனி​யார் ஆம்னி பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன.

இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் ராம​நாத​புரம் மாவட்​டத்​துக்கு செல்​வதற்​காக இரவு 11 மணி​யள​வில் பயணி ஒரு​வர் கிளாம்​பாக்​கம் புறநகர் பேருந்து நிலை​யத்​துக்கு சென்​றுள்​ளார்.

அங்​கிருந்த ஆம்னி பேருந்து ஓட்​டுநரிடம் கட்​ட​ணம் எவ்​வளவு என்று கேட்​டுள்​ளார். அதற்கு ஓட்​டுநர், கட்​ட​ணம் ரூ.1,500 என்று கூறிய​தாக கூறப்​படு​கிறது.

இதற்கு பயணி, ‘விசேஷம் மற்​றும் விடு​முறை நாட்​களில் மட்​டுமே கட்​ட​ணம் உயர்​வாக வாங்​கு​வீர்​கள். இப்​போது சாதாரண நாளில் கட்​ட​ணத்தை இவ்​வளவு உயர்த்தி வாங்​கு​கிறீர்​களே?’ என்று கேட்​டுள்​ளார்.

இதனால் ஆம்னி பேருந்து ஓட்​டுநருக்​கும் பயணிக்​கும் இடையே வாக்​குவாதம் ஏற்​பட்​டு, பின்​னர் கைகலப்​பாக மாறி ஒரு​வரை ஒரு​வர் கைகளால் தாக்​கிக் கொண்​டனர்.

இதனை பேருந்து நிலை​யத்​தில் இருந்த பயணி ஒரு​வர் தனது செல்​போனில் வீடியோ எடுத்து சமூக வலை​தளங்​களில் பதிவேற்​றம் செய்​தார். இந்த வீடியோ தற்​போது சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவி வரு​கிறது. இதை பார்த்து சம்​பந்​தப்​பட்ட பயணி, ஆம்னி பேருந்து ஓட்​டுநரிடம் கிளாம்​பாக்​கம் போலீ​ஸார் வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம்: தட்டிக் கேட்டவர் மீது தாக்குதல்
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் பறிக்கும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in