பாபநாசம் அருகே ரயில் மோதி முதியவர், காப்பாற்ற முயன்ற கேட் கீப்பர் உயிரிழப்பு

பாபநாசம் அருகே ரயில் மோதி முதியவர், காப்பாற்ற முயன்ற கேட் கீப்பர் உயிரிழப்பு
Updated on
1 min read

கும்பகோணம்: ​பாப​நாசம் அருகே தண்​ட​வாளத்தை கடக்க முயன்ற முதி​ய​வரும், அவரை காப்​பாற்ற முயன்ற கேட் கீப்​பரும் ரயில் மோதி உயி​ரிழந்​தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்​பத் மாவட்​டம் கிரித்​தால் பகு​தி​யைச் சேர்ந்​தவர் ராகுல் (30).இவர் தஞ்​சை மாவட்​டம் பாப​நாசத்தை அடுத்த கோபு​ராஜபுரத்​தில் ரயில்வே இருப்பு பாதை கேட்கீப்​ப​ராக பணி​யாற்றி வந்​தார். பாப​நாசத்​தில் நண்​பர்​களு​டன் அறை எடுத்து தங்கி இருந்​தார்.

அந்த்யோதயா விரைவு ரயில்: இந்​நிலை​யில், ராகுல் நேற்று முன்​தினம் பணி​யில் இருந்​த​போது, நாகர்கோவிலில் இருந்து தாம்​பரம் செல்​லும் அந்த்​யோதயாவிரைவு ரயில் வந்து கொண்​டிருந்​தது. அப்​போது முதி​ய​வர் ஒரு​வர் தண்​ட​வாளத்தை கடக்க முயன்​றார். ரயில் அவரை நெருங்கிவந்​து​விட்​டதை பார்த்த ராகுல் ஓடிச் சென்று அவரை காப்​பாற்றமுயன்​றுள்​ளார்.

அப்​போது, ரயில் மோதி​ய​தில் ராகுலும், அந்த முதி​ய​வரும் உயி​ரிழந்​தனர். இதில், அந்த முதி​ய​வரின் உடல்,ரயிலுடன் சுமார் ஒரு கி.மீ. வரை இழுத்​துச் செல்​லப்​பட்​டது.

இதுதொடர்​பாக கும்​பகோணம் ரயில்வே இருப்பு பாதை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து 2 பேரின் உடல்​களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்​தனர். மேலும், உயி​ரிழந்த அடை​யாளம் தெரியாத முதி​ய​வர் யார் என்​பது குறித்தும் விசா​ரித்து வரு​கின்​றனர். ரயில் மோதி உயி​ரிழந்த கேட் கீப்பர் ராகுலுக்கு திரு​மண​மாகி 5 மாதங்​கள்தான் ஆகிறது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

பாபநாசம் அருகே ரயில் மோதி முதியவர், காப்பாற்ற முயன்ற கேட் கீப்பர் உயிரிழப்பு
சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்தி வைப்பு: மாநகராட்சி நடவடிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in