மதுரை அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாப உயிரிழப்பு

சென்னையிலிருந்து கோவில்பட்டிக்கு வளைகாப்புக்கு சென்றபோது சோகம்
மேலூர் அருகே நடந்த விபத்தில்  அப்பளம் போல் நொறுங்கிய  கார்.

மேலூர் அருகே நடந்த விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய கார்.

Updated on
1 min read

மதுரை: மதுரை மேலூர் அருகே கட்​டுப்​பாட்டை இழந்து மைய தடுப்​புச் சுவரை தாண்டி எதிர் திசையில் வந்த மற்​றொரு கார் மீது பயங்​கர​மாக மோதி​யதில் ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 5 பேர் இறந்​தனர்.

சென்னை பாடி​பாக்​கத்​தைச் சேர்ந்த கனக​ராஜ் (55), ராஜகு​மாரி (50) தம்​ப​தி​யின் மகன்​கள் ஸ்ரீராம் (32), பாலாஜி (28) ஸ்ரீராம் மனைவி ரஞ்​சனா (27). இவர்​களது மகள் கிருத்​திகா (2) ஆகியோர் ஒரே காரில் பாலாஜி மனைவி​யின் வளைகாப்பு விழாவுக்​காக சென்​னை​யில் இருந்து கோவில்​பட்​டிக்கு சென்றனர். காரை ஸ்ரீராம் ஓட்​டி​னார்.

கார் மதுரை மாவட்​டம் மேலூர் அரு​கிலுள்ள தும்​பைப்​பட்டி நான்கு வழிச்​சாலை மேம்​பாலத்​தில் நேற்று அதி​காலை 6 மணிக்கு சென்​றது. திடீரென நிலைதடு​மாறிய கார் முன்​னால் சென்ற பைக் மீது மோதி​யது. இதில் கட்​டுப்​பாட்டை இழந்த கார் மையத்தடுப்பைத் தாண்டி எதிர் திசைக்குபாய்ந்​து, அங்கு எதிரில் வந்த காருடன் நேருக்கு நேர் மோதி​யது. இதில் ராஜகு​மாரி, ஸ்ரீராம், ரஞ்​ச​னா, குழந்தை கிருத்​தி​கா, பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர்.

கனக​ராஜ், மற்​றொரு காரின் ஓட்​டுந​ரான மதுரையைச் சேர்ந்த பிர​காஷ் மற்​றும் பைக்​கில் சென்றசிவகங்​கை​யைச் சேர்ந்த முரு​கன், மற்​றொரு முரு​கன் ஆகியோர் படு​கா​யம் அடைந்​தனர். தகவல் அறிந்த மேலூர் போலீ​ஸார், தீயணைப்பு வீரர்​கள் சென்று உடல்​களை மீட்டனர். மேலும், காயமடைந்த கனக​ராஜ் உள்​ளிட்ட 4 பேரை​யும் மேலூர் அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர்.

<div class="paragraphs"><p>மேலூர் அருகே நடந்த விபத்தில்  அப்பளம் போல் நொறுங்கிய  கார். </p></div>
காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in