சித்திரைத் திருவிழாவின்போது மோதல்: மதுரையில் முன்விரோதத்தில் சிறுவன் கொலை

இளைஞர்கள் 5 பேரை கைது செய்த போலீஸார்
சித்திரைத் திருவிழாவின்போது மோதல்: மதுரையில் முன்விரோதத்தில் சிறுவன் கொலை
Updated on
1 min read

மதுரை: சித்​திரைத் திரு​விழா​வின்​போது ஏற்​பட்ட மோதல் காரண​மாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறு​வன் வெட்​டிக் கொலை செய்​யப்​பட்ட சம்​பவம் தொடர்​பாக, சிறு​வன் உள்பட 5 பேரை போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர்.

மீனாட்சி அம்​மன் கோயில் அருகே வடக்கு ஆவணி மூல வீதிபகு​தி​யில் மாநக​ராட்​சிக்கு சொந்​த​மான வாக​னக் காப்​பகம் செயல்​படு​கிறது.

இங்கு நேற்று முன்​தினம் நள்​ளிரவு நின்​றிருந்த குபேந்​திரன் என்ற 17 வயது சிறு​வனை, இரு சக்கர வாக​னத்​தில் வந்த 5 பேர் கும்​பல் சரமாரி​யாக வெட்​டிக் கொலை செய்​து​விட்டு தப்​பியது.

இதுகுறித்து விளக்​குத்​தூண் போலீ​ஸார் வழக்​குப் பதிந்​து, அப்​பகு​தி​யிலுள்ள கண்​காணிப்பு கேமரா காட்​சிகளின் பதிவு​களை ஆராய்ந்​தனர். அதில் சிறு​வன் குபேந்​திரனை, 2 இரு சக்கர வாக​னங்​களில் வந்த கும்​பல் சரமாரி​யாக வெட்​டியது.

அவர்​களிட​மிருந்து தப்​பிக்க முயன்ற சிறு​வனை விடா​மல் துரத்​திச் சென்று வெட்டி படுகொலை செய்​து​விட்டு அக்​கும்​பல் தப்​பிச் சென்​றது தெரிய​வந்​தது.

விசா​ரணை​யில், கடந்த மாதம் சித்​திரைத் திரு​விழா​வின்​போது, சிறு​வன் குபேந்​திரனுக்​கும், முத்​து​மணி என்ற தொத்​தல் முத்​து​மணி என்​பவருக்​கும் இடையே வடக்​கு​மாசி வீதி அரு​கிலுள்ள கழிப்​பறை​யில் மோதல் ஏற்​பட்​டது.

இதில் இரு​வரும் ஒரு​வரையொரு​வர் தாக்​கிக்​கொண்​டனர். அதில் முத்​து​மணி காயமடைந்​தார். இந்த முன்​விரோதம் காரண​மாக, ஆத்​திரமடைந்த முத்​து​மணி குபேந்​திரனை கொலை செய்ய திட்​ட​மிட்டு காத்​திருந்​ததாக தெரிகிறது. அதன்​படி, முத்​து​மணி, அவரது தம்பி ராஜ் உள்​ளிட்ட 5 பேர் கொண்ட கும்​பல் குபேந்​திரனை சரமாரி​யாக வெட்​டிக் கொன்​றது.

இதுதொடர்​பாக விளக்​குத்​தூண் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​து, திடீர் நகரரைச் சேர்ந்த முத்​து​மணி, அவரது தம்பி ராஜ், முத்​துக்​கு​மார், மேல​வாசல் பகுதியைச் சேர்ந்த சதீஸ்​கு​மார், வடக்​கு​மாசி வீதி​யைச் சேர்ந்த 18 வயது சிறு​வன் ஆகியோரை கைது செய்​தனர்.

அவர்​களிட​மிருந்து கொலைக்கு பயன்​படுத்​திய அரி​வாள் உள்​ளிட்ட ஆயுதங்​கள், பைக்​கு​களை போலீஸார் பறி​முதல் செய்​தனர்.

மேலும் கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்றும் கைதானவர்கள் தவிர வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கொலையான குபேந்​திரன் மீது 5-க்​கும் மேற்​பட்ட வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ள​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். கொலை​யாளி​களை விரைந்து கைது செய்த போலீ​ஸாரை, காவல் ஆணை​யர் அபிஷேக் தீக்​சித் பாராட்​டி​னார்.

சித்திரைத் திருவிழாவின்போது மோதல்: மதுரையில் முன்விரோதத்தில் சிறுவன் கொலை
“உங்கள் மகளின் நினைவு வரவில்லையா?” - வேடநத்தம் மாணவி கொலை குற்றவாளியிடம் நீதிபதி கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in