

கோப்புப் படம்
சென்னை: சென்னை, எழும்பூரில் உள்ள தமிழக காவல் துறையின் தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு (அவசர அழைப்பு 100) நேற்று அதிகாலை போன் அழைப்பு ஒன்று வந்தது.
அதில், எதிர்முனையில் பேசிய நபர், ‘சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும்’ எனவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கட்டுப்பாட்டு அறை போலீஸார், உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, முதல்வர் வீட்டில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள், மோப்ப நாய்கள், மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர்.
பல மணி நேரம் நடைபெற்ற சோதனையின் முடிவில் அங்கிருந்து எந்த வெடிப் பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. எனவே, வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.