

சென்னை: சாந்தோமில் உள்ள நடிகை குஷ்பு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக டிஜிபி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு நேற்று மின்னஞ்சல் ஒன்று வந்தது.
தகவலறிந்த உயர் அதிகாரிகள், நடிகை குஷ்பு வீட்டில் சோதனை நடத்தும்படி உத்தரவிட்டனர். இதையடுத்து வெடிகுண்டு கண்டறிந்து அகற்றும் நிபுணர்களும், போலீஸாரும் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிப்பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.
இதனால், இது வெறும் புரளி என தெரியவந்தது. இது தொடர்பாக சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
2 நாட்களுக்கு முன்பு நடிகை திரிஷா வீட்டுக்கு இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.