சென்னை | ஐ.டி பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பைக் டாக்ஸி ஓட்டுநர் கைது

சென்னை | ஐ.டி பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பைக் டாக்ஸி ஓட்டுநர் கைது
Updated on
1 min read

சென்னை: ஐ.டி. பெண் ஊழியரை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்​த​தாக, பைக் டாக்ஸி பைக் ஓட்​டுநர் கைது செய்​யப்​பட்​டார். சென்​னை, துரைப்​பாக்​கத்தில் உள்ள தங்​கும் விடுதி ஒன்​றில் 26 வயதுடைய பெண் ஒரு​வர், தங்கி அங்​குள்ள ஐ.டி. நிறு​வனத்​தில் பணி செய்​கிறார்.

இந்​நிலை​யில், அவர் கடந்த 22-ம் தேதி அதி​காலை பணி முடிந்து துரைப்​பாக்​கம், பிள்​ளை​யார் கோயில் தெரு வழி​யாக தங்​கும் விடு​திக்கு திரும்​பிக் கொண்​டிருந்​தார்.

அப்​போது, அந்த வழி​யாக ஹெல்​மெட் அணிந்​த​படி பைக்​கில் வந்த இளைஞர் ஒரு​வர், ஐ.டி. ஊழியரிடம் பாலியல் சில்​மிஷத்​தில் ஈடுபட்​டுள்​ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்தி கூச்​சலிடவே பைக்​கில் வந்த இளைஞர் அங்​கிருந்து தப்​பி​னார்.

இதுகுறித்​து, துரைப்​பாக்​கம் காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது. அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். தப்​பிய நபர் ஓட்டி வந்தபைக் எண்ணை அடிப்​படையாக வைத்து விசா​ரிக்​கப்​பட்டது.

இதில், ஐ.டி. ஊழியரிடம் பாலியல் அத்து மீறலில் ஈடு​பட்டு தப்​பியது பெருங்​குடி ராஜீவ் நகரில் வசிக்​கும் திருவண்​ணா​மலை​யைச் சேர்ந்த பாபு (40) என்​பது தெரிந்​தது.

தலைமறைவாக இருந்த அவரை போலீ​ஸார் நேற்​று​முன்​தினம் கைது செய்​தனர். அவரது பைக்​கும் பறி​முதல் செய்​யப்​பட்​டது. மேலும், நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் பாபு சென்னையில் தனி​யார் பைக் டாக்ஸி ஓட்​டுந​ராக பணிபுரிந்து வருவது தெரிய வந்​தது. இதையடுத்​து, அவரை போலீ​ஸார் சிறை​யில் அடைத்​தனர்.

சென்னை | ஐ.டி பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பைக் டாக்ஸி ஓட்டுநர் கைது
கோடை வெப்ப நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் தயார் நிலையில் 360 சுகாதார நிலையங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in