ஆனைமலை அருகே தொழிலாளி அடித்துக் கொலை

ஆனைமலை அருகே தொழிலாளி அடித்துக் கொலை
Updated on
1 min read

பொள்ளாச்சி: ஆனைமலை அருகே வட மாநில தொழிலாளி மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கோட்டூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிஹார் மாநிலத்தை சேர்ந்தவர் சிவ்டாட் மான்ஜி (31). இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ரமணமுதலிபுதூர் பகுதியில் உள்ள பாட்டில் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்துள்ளார். பணி முடிந்தவுடன் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு ஏதாவது ஓரிடத்தில் இரவு தங்கி, காலையில் பணிக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ரமணமுதலிபுதூர் பிரிவு நாக பிள்ளையார் கோயில் எதிரில் படுத்திருந்த சிவ்டாட் மான்ஜியை மர்ம நபர்கள் தலையில் மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளனர். நேற்று காலை அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற கோட்டூர் போலீஸார் சிவ்டாட் மான்ஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வால்பாறை டிஎஸ்பி கீர்த்திவாசன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in