காட்டுமன்னார்கோவிலில் உணவு டெலிவரி மூலம் கஞ்சா விற்றவர் கைது

காட்டுமன்னார்கோவிலில் உணவு டெலிவரி மூலம் கஞ்சா விற்றவர் கைது
Updated on
1 min read

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாதன் (25). இவர் ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவர் நேற்று வழக்கம் போல காட்டுமன்னார்கோவில் வசந்தம் நகர் பகுதியில் உணவு டெலிவரி செய்ய வந்தார்.

அப்போது ரோந்து பணியில் இருந்த போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் பரந்தாமனின் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தார். அவர் வைத்திருந்த பெட்டியில் உணவு மற்றும் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் கஞ்சாவை வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கடத்தி வந்து உணவு டெலிவரி மூலம் விற்பனை செய்வதாக பத்மநாதன் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் பத்மநாபனை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in