Published : 14 Apr 2023 05:48 AM
Last Updated : 14 Apr 2023 05:48 AM

ஆந்திர தம்பதியை மிரட்டி ரூ.60 லட்சம் வழிப்பறி

பழைய வண்ணாரபேட்டை

சென்னை: ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் துர்கி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பாராம் (48). இவரது மனைவி லட்சுமி (45). இவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள கிருஷ்ணா என்பவருக்குச் சொந்தமான ஒரு நகைக் கடையில் ஊழியர்களாக வேலை செய்கின்றனர்.

இந்நிலையில் கிருஷ்ணா, இருவரிடமும் ரூ.60 லட்சத்தைக் கொடுத்து சென்னை பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் நகைக் கடை வைத்திருக்கும் ராஜி என்பவரிடம் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வீட்டில் சந்தித்து பணத்தை ஒப்படைக்குமாறு கூறி அனுப்பி வைத்தார்.

இதையடுத்து இருவரும் பழைய வண்ணாரபேட்டைக்கு வந்தனர். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த 2 பேர், ஆந்திர தம்பதியை கத்தியைக் காட்டி மிரட்டி, அவர்கள் வைத்திருந்த ரூ.60 லட்சத்தையும், செல்போன்களையும் பறித்துக் கொண்டு தப்பினர்.

இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து தலைமறைவானவர்களைத் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x