

சென்னை: இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து விமானம் சென்னைக்கு நேற்று வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது வந்த பெண் பயணிமீது அதிகாரிகளுக்கு சந்தேகம்ஏற்பட்டு, அவரை தனி அறைக்குஅழைத்து சென்று சோதனை செய்ததில் ரூ.37.25 லட்சம் மதிப்புள்ள 725 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதேபோல், இலங்கையில் இருந்து மற்றொரு விமானத்தில் வந்த ஆண் பயணி ஒருவர் ரூ.35.82 லட்சம் மதிப்புள்ள 697கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இருவரிடம் இருந்து ரூ.73.07 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 422 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.