

திருச்சி: திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே சவேரியார்புரத்தை சேர்ந்தவர் வில்சன்(26). டீ மாஸ்டரான இவருக்கு, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் கடந்த ஓராண்டாக பணத்தை இழந்துள்ளார். மேலும் ரூ.4 லட்சத்துக்கு மேல் கடனாளியாகிவிட்டார்.
பணத்தை கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான வில்சன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் வில்சன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.