சேலம் | போக்சோ வழக்கில் ஆயுதப்படை காவலர் கைது

சேலம் | போக்சோ வழக்கில் ஆயுதப்படை காவலர் கைது

Published on

சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்த சிறுவாச்சூரைச்சேர்ந்தவர் பிரபாகரன். பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு, மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இவர் 17 வயது சிறுமியுடன் பழகி வந்தார்.

இந்நிலையில், சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி புகாரளித்தனர். இதையடுத்து, பிரபாகரன் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்த போலீஸார், அவரை கைது செய்தனர். நீதிமன்றக் காவலுக்காக அழைத்துச் சென்றபோது அவர் தப்பினார்.

இந்நிலையில் பிரபாகரனை பணியிடை நீக்கம் செய்து பெரம்பலூர் எஸ்.பி. உத்தரவிட்டார். இதனிடையே கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி அருகே தலைமறைவாக இருந்த பிரபாகரனை, ஆத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in