Published : 18 Mar 2023 05:26 PM
Last Updated : 18 Mar 2023 05:26 PM

கும்பகோணம் | சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இருவர் கைது

கும்பகோணம்: கும்பகோணத்தில் எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கும்பகோணத்தை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு மேலக்காவிரி, செக்கடித்தெருவை சேர்ந்த செல்வம் (65) மற்றும் முருகன் (55) ஆகிய 2 பேரும், அண்மைக்காலமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அச்சிறுமிக்கு அண்மையில், பாலியல் தொல்லை கொடுத்தபோது அருகிலுள்ளவர்கள், அவர்களை பிடித்து தாக்கி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து மகளிர் காவல் நிலைய போலீஸார், அவர்கள் 2 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்து, கும்பகோணம் கிளைச் சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x