புதுச்சேரி | தாயை எரித்துக் கொன்ற இளைஞர் கைது

புதுச்சேரி | தாயை எரித்துக் கொன்ற இளைஞர் கைது
Updated on
1 min read

புதுச்சேரி: வில்லியனூர் ஆண்டியார்பாளை யத்தைச் சேர்ந்தவர் தட்சிணா மூர்த்தி (60). கூலித் தொழிலாளி. இவரது மனைவி லதா (55). இவர்களது இளைய மகன் புகழ் மணி (24). நேற்று முன்தினம் இரவு புகழ்மணி சாப்பாடு கேட்டுதகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது திடீரென தாய் லதா மீது,மண்ணெண்ணையை ஊற்றி அவர் தீ வைத்துள்ளார். தட்சிணா மூர்த்தி தீயை அணைக்க முயன்றுகாயமடைந்தார். லதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தீக்காயமடைந்த தட்சிணாமூர்த்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து மங்கலம் போலீஸார் நேற்று புகழ்மணியை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in