Published : 02 Mar 2023 02:48 PM
Last Updated : 02 Mar 2023 02:48 PM

மதுரை மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி தற்கொலை

மதுரை: மதுரை மாநகர் பாலரெங்காபுரம் பகுதியில் புற்றுநோய் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, ஏராளமான நோயாளிகள் மதுரை மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு சிகிச்சையில் இருந்த திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் புற்றுநோய் தீவிரமடைந்து கடுமையான வலியில் தவித்து வந்துள்ளார். மேலும், தனது குடும்பத்தாரிடமும் மருத்துவர்களிடமும் வலி அதிகமாக இருப்பதக ரவி தொடர்ந்து கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில். இன்று அதிகாலை 4 மணி அளவில், மருத்துவமனைக் கழிப்பறைக்குச் சென்ற ரவி நீண்ட நேரமாக வெளியே வராததால் கதவை உடைத்து பார்த்தபோது, தூக்கிட்ட நிலையில் ரவி சடலமாக கிடைந்துள்ளார். இதனையடுத்து, தகவலறிந்து வந்த காவல் துறையினர், ரவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். புற்றுநோய் சிகிச்சைக்கு வந்த நோயாளி தாங்க முடியாத வலியின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

| தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம். |

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x