சென்னை | 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: விடுவிக்கப்பட்ட நபருக்கு10 ஆண்டு கடுங்காவல்

சென்னை | 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: விடுவிக்கப்பட்ட நபருக்கு10 ஆண்டு கடுங்காவல்
Updated on
1 min read

சென்னை: திருப்பூரில் தங்கியிருந்து டெய்லராக பணிபுரிந்து வந்த கேரளாவைச் சேர்ந்த பெண்ணின் 8 வயது மகளை, பக்கத்து வீட்டில் வசித்த தண்டாயுதம் என்ற கண்ணன் உள்ளிட்ட சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த சிறுமியின் தாயார் போலீஸில் புகார் அளித்தார்.

அதன்பேரில் திருப்பூர் வடக்குஅனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், கண்ணன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவி்ல்லை எனக்கூறி அவரை வழக்கில் இருந்து விடுவித்து கடந்த 2014-ம் ஆண்டுஉத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்பாக நடந்தது. அரசுதரப்பில் வழக்கறிஞர் கிஷோர்குமார் ஆஜராகி வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட கண்ணனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம்அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.10.50 லட்சத்தைவழங்க வேண்டும் என்றும்,கண்ணனின் குழந்தைகள் தடையின்றி படிப்பைத் தொடர தமிழகஅரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in