சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் முதியவருக்கு 5 ஆண்டு சிறை: செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் முதியவருக்கு 5 ஆண்டு சிறை: செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

செங்கல்பட்டு: 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 67 வயது முதியவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் 5 ஆண்டுகள் சிறை, ரூ.5,000 ரூபாய் அபராதம் விதித்து செங்கை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் நீலாங்கரை பகுதியைச் சேர்ந்த ராஜீ என்பவரது மகன் ஜெயபால் (67). இவர் கடந்த 2013 நவம்பர் மாதம் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது பற்றி சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். சிறுமியின் பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீஸார் ஜெயபாலை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணை நிறைவடைந்த நிலையில் சிறுமியிடம் ஜெயபால் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை, ரூ. 5,000 அபராதம் விதித்து நீதிபதி தமிழரசி உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மாதத்துக்குள் ரூ. 50,000 வழங்கவும் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in