போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட் - கரூர் நீதிமன்றம் உத்தரவு

போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட் - கரூர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கரூர்: போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு கரூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், தாந்தோணிமலை காவல் நிலையத்தில் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கு நடந்து வருகிறது.

இவ்வழக்கில் விசாரணை அதிகாரியான அப்போதைய பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டரும், தற்போது சேலம் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டருமான ஏ.பி.சண்முகசுந்தரம். கடந்த ஒராண்டாக 20 வாய்தாக்களுக்கு ஆஜராகவில்லை.

எனவே, கரூர் கூடுதல் அமர்வு நீதிபதி ஏ.நசீமாபானு நேற்று (பிப். 21 தேதி) இன்ஸ்பெக்டர் ஏ.பி.சண்முகசுந்தரத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in