

திருப்பூர்: தேனி மாவட்டம் கோம்பையை சேர்ந்தவர் ஜெகன் (36). இவர், திருப்பூர் மாவட்டம் மங்கலம்காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், பணி முடிந்து நேற்று முன்தினம் வீட்டுக்கு சென்ற ஜெகன், வீட்டில்யாரும் இல்லாத நிலையில், திடீரென தன்னுடன் பணிபுரியும் காவலர்களை அலைபேசி மூலமாக தொடர்புகொண்டார்.
அப்போது, விஷமாத்திரை சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த காவலர்கள், ஜெகனை பார்க்க சென்றனர்.
மது போதையில் விஷம் அருந்தியதைகண்டு அதிர்ச்சி யடைந்தனர். அங்கிருந்து அவரை மீட்டு,திருப்பூர்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி ஜெகன் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக மங்கலம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக ஜெகன் விஷம் அருந்தி தற்கொலை செய்தது, சக போலீஸாரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.