Published : 31 Jan 2023 07:05 AM
Last Updated : 31 Jan 2023 07:05 AM

திண்டுக்கல் | அமைச்சர் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு: பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது

திண்டுக்கல்: அமைச்சர் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பியதாக பாஜக நிர்வாகிகள் 2 பேரை திண்டுக்கல் போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் பொம்முசுப்பு (38), நாட்ராயன் (40). இவர்கள் இருவரும் சமூக வலைதளங்களில் அமைச்சர் ஐ.பெரியசாமி குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் குமரேசன் புகாரின் பேரில் பொம்முசுப்பு, நாட்ராயன் ஆகியோர் மீது திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x