

ராஜபாளையம்: ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (33). இவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து, கணவர் மற்றும் 5 வயதில் உள்ள மகனுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், வேலைக்குச் சென்ற மகாலட்சுமி திடீரென காணாமல் போனதாக கடந்த 19-ம் தேதி காவல் நிலையத்தில் கணவர் புகார் செய்தார். போலீஸார் நடத்திய விசாரணையில், மகாலட்சுமி தன்னுடன் வேலை பார்த்த 17 வயது சிறுவனுடன் கன்னியாகுமரி சென்றது தெரியவந்தது.
போலீஸார், அங்கு சென்று இருவரையும் அழைத்து வந்தனர். இதைத் தொடர்ந்து மகாலட்சுமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவரைக் கைது செய்தனர்.