Last Updated : 25 Jan, 2023 04:15 AM

 

Published : 25 Jan 2023 04:15 AM
Last Updated : 25 Jan 2023 04:15 AM

மதுரை காமராஜபுரத்தில் தொடரும் மோதல் சம்பவம்: திமுக பிரமுகரை கொல்ல திட்டமிட்ட கூலிப்படையினர் கைது

மதுரை: மதுரையில் மாநகராட்சி முன்னாள் மண்டலத் தலைவரும், திமுக பிரமுகருமான விகே. குருசாமியை கொல்ல திட்டமிட்ட கூலிப்படைக் கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்தவர்கள் விகே.குருசாமி, ராஜபாண்டி. இருவரும் மாநக ராட்சி மண்டலத் தலைவராக இருந் தவர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்குள் அரசியல் ரீதியாக முன் விரோதம் ஏற்பட்டு, இருதரப்பிலும் அடுத்தடுத்து கொலைச் சம்பவங்கள் நடந்தன. இவ்வழக்குகளில் சிக்கிய விகே. குருசாமி, அவரது மகன் ஆகியோர் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ராஜபாண்டி தரப்பைச் சேர்ந்த, அவரது நெருங்கிய உறவினர் வெள்ளக் காளி என்பவர், குருசாமியை கொலை செய்ய பலமுறை திட் டம் தீட்டினார். இதையடுத்து ஒரு வழக்கில் சிக்கிய அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், விகே.குருசாமி மதுரையிலுள்ள அவரது வீட் டுக்கு வருவதாக தகவல் அறிந்த வெள்ளக்காளி, வெளியூர் நபர்களை பயன்படுத்தி கொல்ல முயன்றுள்ளார்.

இதற்காக மதுரை மத்திய சிறையில் அடைக் கப்பட்டுள்ள திருச்சியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் சகோதரர் ராமன் மூலம் கோவை, திண்டுக்கல், பழநி, திருச்சி பகுதியைச் சேர்ந்த கூலிப்படையினரை ஏற் பாடு செய்தார். இத்திட்டத்தின்படி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு குருசாமியின் வீடு அருகே அவரைக் கொலை செய்யும் நோக்கில் 6 பேர்ஆயுதங்களுடன் மேல அனுப்பானடி பகுதியில் பதுங்கி நோட்டமிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கீரைத்துறை காவல் ஆய்வாளர் பெத்துராஜ் உள்ளிட்ட போலீஸார், அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மேட்டுபட்டி ஜேசு ரூபன் (30), திருச்சி அரியமங்கலம் மணிகண்டன் (25), மதுரை காமராஜபுரம் மாதவன்(18), மதுரை தென்பழஞ்சி ராஜேஷ் (30), பழநி அடிவாரம் பூபாலன் (32), எல்லீஸ்நகர் பாண்டியராஜன் (23) ஆகியோர் எனத் தெரியவந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், வெள்ளக்காளியின் தூண்டுதலின்பேரில், குருசாமியை கொல்ல திட்டமிட்டதும், இதற்காக திருச்சியைச் சேர்ந்த ராமர் என்பவரது ஏற்பாட்டில் மதுரையில் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கீரைத்துறை போலீ ஸார் 6 பேரையும் கைது செய்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். போலீஸார் கூறுகையில், கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் வழக்கறிஞர். மேலும் 3 பேரை தேடுகிறோம் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x