கோவை | கஞ்சா சாக்லெட் விற்றவர் கைது

கோவை | கஞ்சா சாக்லெட் விற்றவர் கைது
Updated on
1 min read

சூலூர்: கோவை சுல்தான்பேட்டை போலீஸார், சித்தநாயக்கன் பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்குரிய முறையில் நின்றிருந்த நபரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அந்நபர், சித்தநாயக் கன்பாளையம் கிழக்கு வீதியைச் சேர்ந்த பப்லுகுமார் (36) என்பதும், கஞ்சா சாக்லெட்கள் விற்பனை செய்பவர் எனவும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 320 கஞ்சா சாக்லெட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in