Published : 22 Jan 2023 04:13 AM
Last Updated : 22 Jan 2023 04:13 AM

கிருஷ்ணகிரி | தாய் கொடுத்த விஷத்தை குடித்த 2 குழந்தைகள் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே செந்தாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கவுரி (26). இவரது கணவர் கெட்டூரைச் சேர்ந்த பேக்கரி மாஸ்டர் முத்துராஜ். இவர்களது மகன் ஜீவன் (4), மகள் பாவனா ஸ்ரீ (2). கடந்த ஒரு மாதமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே முத்துராஜ் இருந்துள்ளார்.

இதனால் தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 17-ம் தேதி ஏற்பட்ட தகராறு காரணமாக, செந்தாரப்பள்ளியில்உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தை களுடன் கவுரி சென்றார். குடும்ப பிரச்சினையால் மனமுடைந்து காணப்பட்ட கவுரி, நேற்று முன்தினம் இரவு, தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் குடித்தார்.

மயங்கி விழுந்த 3 பேரையும், அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், நேற்று பிற்பகலில் குழந்தைகள் ஜீவன், பாவனா ஸ்ரீ ஆகியோர் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கவுரிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து கந்திகுப்பம் போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் செந்தாரப்பள்ளி, கெட்டூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x