ஊத்தங்கரை அருகே பெண்ணை வழிமறித்து தாக்கிய 4 இளைஞர்கள் கைது

ஊத்தங்கரை அருகே பெண்ணை வழிமறித்து தாக்கிய 4 இளைஞர்கள் கைது
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே பெண்ணை வழிமறித்து தாக்கிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் பெரியகோட்ட குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவதி (27). இவர், நேற்று முன்தினம் பகலில் கல்லாவி பகுதியில் கார் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் காரை வழிமறித்து, வேகமாக காரை ஓட்டுவதாகக் கூறி ரேவதியை தாக்கியுள்ளனர்.

இது குறித்து, ரேவதி கல்லாவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீஸார் கல்லாவி மேட்டுத் தெருவைச் சேர்ந்த ரவிவர்மா (30), ராஜ்குமார் (32), சுரேஷ் (36), பிரசாந்த் (30) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in