வத்திராயிருப்பு அருகே பெண் கொலை வழக்கில் கணவர் கைது

வத்திராயிருப்பு அருகே பெண் கொலை வழக்கில் கணவர் கைது
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்தி கோயில் பழங்குடியினர் குடியிருப்பை சேர்ந்தவர் வனராஜ்(50). இவருக்கு ஏற்கெனவே திருமணாகிவிட்டது. இவர் அதே பகுதியைச் சேர்ந்த கணவரைப் பிரிந்து வாழ்ந்த ஏசுராணி (எ) உமா (26) என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார்.

வனராஜ் கான்சாபுரம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் தங்கியிருந்து காவல் வேலை செய்து வந்தார். உடன் உமா, அவரது இரு மகள்கள் வசித்து வந்தனர். கடந்த 13-ம் இரவு தோட்டத்தில் உள்ள மோட்டார் அறையின் மாடியில் வனராஜ், உமா தூங்கினர். மறுநாள் காலை பார்த்தபோது உமா உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

கான்சாபுரம் கிராம நிர்வாக அலுவலரிடம் மனைவியை கொலை செய்ததாக வனராஜ் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து வனராஜை கூமாபட்டி போலீஸார் கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in