Published : 08 Jan 2023 04:30 AM
Last Updated : 08 Jan 2023 04:30 AM

கட்டுக் கட்டாக கள்ள நோட்டுகள்: சங்கரன்கோவில் போலீஸார் ஈரோட்டில் விசாரணை

ஈரோடு: தென்காசி மாவட்டம், களப்பாகுளம் பகுதியில் சங்கரன் கோவில் தாலுகா போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த 2 கார்களில், 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன.

அவை ஈரோட்டிலிருந்து கோவில்பட்டி வழியாக சங்கரன் கோவிலுக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து காரில் இருந்த கள்ளநோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் கைதான இரு பெண்கள் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்தது. நேற்று, ஈரோடு கருங்கல்பாளையம் வண்டியூரான் பகுதியில் சங்கரன்கோவில் போலீஸார் விசாரணை மேற்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x