Published : 29 Dec 2022 04:33 AM
Last Updated : 29 Dec 2022 04:33 AM

சுரானா நிறுவனத்தின் ரூ.11.62 கோடி சொத்துகள் முடக்கம்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சுரானா இண்டஸ்ட்ரியல் நிறுவனம் மற்றும் சுரானா பவர் ஆகியவை ஐடிபிஐ, எஸ்பிஐ ஆகிய வங்கிகளிடம் இருந்தும், சுரானா கார்ப்பரேஷன் நிறுவனம் எஸ்பிஐ வங்கியிடம் இருந்தும் மொத்தம் ரூ.3,986 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு சுரானா நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இதில் சுமார் 400 கிலோ தங்கக் கட்டிகள், முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதன் அடிப்படையில் சுரானா நிறுவன இயக்குநர்கள் 3 பேர் மற்றும் ஊழியர் ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், சுரானா குழும நிறுவனங்களுடன் தொடர்புடைய பல்வேறு நபர்களுக்கு சொந்தமான ரூ.11.62 கோடி மதிப்புள்ள நகை மற்றும் ரொக்கம் அடங்கிய சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x