Last Updated : 28 Nov, 2022 01:24 PM

 

Published : 28 Nov 2022 01:24 PM
Last Updated : 28 Nov 2022 01:24 PM

கும்பகோணம்: பெற்றோரை கொலை செய்துவிட்டு இயல்பாக அதே வீட்டில் இருந்த நபர் கைது

விசாரணையில் ஈடுபடும் போலீஸார்

கும்பகோணம்: பெற்றோரை கொலை செய்துவிட்டு இயல்பாக அதே வீட்டில் இருந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் தில்லையம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (80). இவரது மனைவி லட்சுமி (73). இவர்களுக்கு மொத்தம் 3 வாரிசுகள்.

மூத்த மகன் ரவிச்சந்திரன் மின்சாரத் துறையில் வேலை பார்க்கும் போது விபத்தில் உயர்ந்துள்ளார்‌. மேலும் மகள் கீதாவும் திருமணம் ஆகி இறந்துவிட்டார். இந்நிலையில் இளைய மகன் ராஜேந்திரன் (45) மட்டுமே தில்லையம்பூரில் தாய் தந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் ராஜேந்திரனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

மேலும் அடிக்கடி தாய் - தந்தையுடன் ராஜேந்திரன் தகராறில் ஈடுபட்டுள்ளார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு தகராறு முற்றவே ஆத்திரமடைந்த ராஜேந்திரன் தாய், தந்தையை வீட்டிலிருந்த அரிவாளால் எடுத்து தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டி கொலை செய்துள்ளார்.

இருவரும் உயிரிழந்த நிலையில், அவர்களின் சடலத்துடன் இரண்டு நாட்கள் வீட்டிலேயே சர்வ சாதாரணமாக இருந்துள்ளார். மேலும் கொலை நடந்த இந்த இரண்டு நாட்களும் காலை எழுந்து அருகில் உள்ள குளித்துவிட்டு வீட்டுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை (28-ம் தேதி) வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே அக்கம் பக்கத்தினர் உடனடியாக பட்டீஸ்வரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்துவந்த காவல்துறையினர் உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் மகன் ராஜேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களும் தடைய அறிவியல் துறையினரும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x