Published : 20 Nov 2022 04:30 AM
Last Updated : 20 Nov 2022 04:30 AM

திருப்பூர் | சிசிடிவியை உடைத்து வீட்டுக்குள் புகுந்த கும்பல்

வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்த சிசிடிவி காட்சி.

திருப்பூர்: பல்லடம் தாலுகா வடமலைபாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி தம்புசாமி (39). கரைப்புதூரில் இவருக்கு சொந்தமான வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார்.

கடந்த 17-ம் தேதி இரவு வாடகைக்கு வைத்துள்ள வீட்டுக்குள் தலைக்கவசம், முகமூடி மற்றும் முகக்கவசம் அணிந்த மர்ம நபர்கள் 6 பேர் புகுந்துள்ளனர். உள்ளே நுழையும்போது வீட்டின் வாசல் மற்றும் வெளியே இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்தனர்.

இதுகுறித்து தம்புசாமி அளித்த புகாரின்பேரில், பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். அதில் சம்பவத்தின்போது வீட்டில் திருட்டு ஏதும் நடைபெறவில்லை என்றும், அதேநேரத்தில் எனது சொத்தை சிலர் அபகரிக்க முயற்சிக்கின்றனர் என்று தம்புசாமி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x