Published : 15 Nov 2022 04:44 PM
Last Updated : 15 Nov 2022 04:44 PM

டெல்லி கொடூரம் | வீட்டில் ஷ்ரித்தா உடல் பாகங்கள்... புதிய காதலியை அழைத்துவந்த அஃப்தாப் - அதிர்ச்சி தகவல்கள்

கொலையாளி அஃப்தாப், கொலையான ஷ்ரித்தா | கோப்புப் படங்கள்

புதுடெல்லி: டெல்லியில் இளம்பெண்ணை கொடூரமாக கொலை செய்து அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்த வழக்கில் கைதான இளைஞர், அந்தக் கொலை நடந்த வெகு சில நாட்களிலேயே புதிய காதலியை தேடிக் கொண்ட தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் முதல் காதலியுடன் அறிமுகமான அதே டேட்டிங் ஆப்பில் தான் புதிய காதலியையும் அடைந்துள்ளார்.

ஷ்ரித்தா கொலை செய்யப்பட்ட சில நாட்களிலேயே அந்தப் பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஷ்ரித்தாவின் உடலை ஃப்ரிட்ஜில் மறைத்துவைத்த அவர். அந்தப் பெண் வரும்போது மட்டும் உடல் பாகங்களை அலமாரியில் வைத்துப் பூட்டியுள்ளார். இதனையடுத்து அஃப்தாப் அவரைத் தவிர வேறு பெண்கள் யாரையும் அழைத்து வந்தாரா? அவர்களில் யாரும் கொலையை தூண்டினார்களா? கொலைக்கு உதவினார்களா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கத்தி கைவந்த கலை... - அஃப்தாப் சமையல் கலையை முறைப்படி கற்றுக் கொண்டவர். அதனால் அவருக்கு கத்திகளை எப்படி பயன்படுத்த வேண்டும். இறைச்சி வெட்டும்போது ரத்தத்தை எப்படி சுத்தப்படுத்த வேண்டும் என்பது தெரிந்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

அதேபோல் வீட்டிலிருந்து துர்நாற்றம் வராமல் இருக்க தொடர்ந்து ஊதுவத்திகளை ஏற்றிவைத்துள்ளார். எந்த சலனமும் இன்றி அதே வீட்டிலிருந்து வழக்கம்போல் வேலைக்கு சென்று வந்துள்ளார். அவரது ப்ரவுசிங் ஹிஸ்டரியில் பெரும்பாலும் ரத்தக் கறைகளை சுத்தம் செய்வது எப்படி? இறைச்சியை வெட்டுவது எப்படி? என்பன போன்ற தகவல்களையே அதிகம் தேடியிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், அஃப்தாப் கொலையை நிகழ்த்திய பின்னர் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ஷ்ரித்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பதிவுகளைப் பகிர்ந்துள்ளார். ஆனால், ஷ்ரித்தாவின் தொலைபேசி தொடர்ந்து ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த நண்பர்கள் ஷ்ரித்தாவின் சகோதரர், பெற்றோரை உஷார் படுத்தியுள்ளனர். அதன் பேரிலேயே அடுத்தடுத்த நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.

24 மணி நேரமும் கண்காணிப்பு: கைது செய்யப்பட்ட அஃப்தாப் லாக் அப்பில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் 24 மணி நேரம் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். அவருடன் அந்த லாக் அப்பில் இன்னொரு கைதி மட்டும் இருக்கிறார். அங்கு காவலர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உயர் அதிகாரிகளும் அவ்வப்போது லாக் அப்பை பார்வையிட்டுச் செல்கின்றனர். அந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் எந்தவித சலனமும் இல்லாமல் அஃப்தாப் உறங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

எவ்வித சலனமும் இல்லாமல் தூங்கும் அஃப்தாப்

பின்புலம் என்ன? - மகாராஷ்டிர தலைநகர் மும்பையின் பால்கர் பகுதியை சேர்ந்தவர் ஷிரத்தா (26). இவர் மும்பையின் மலாட் பகுதியில் உள்ள ‘கால்சென்டரில்' பணியாற்றி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டில் அஃப்தாப் அமீன் பொன்னவாலா என்பவருடன் ஷிரத்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. முதலில் நண்பர்களாக பழகிய அவர்கள் பின்னர் காதலர்களாக மாறினர்.

வேறு மதத்தைச் சேர்ந்த இளைஞரை காதலிப்பதை ஷிரத்தாவின் பெற்றோர் விரும்பவில்லை. மகளின் காதலுக்கு அவர்கள் ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் காதலனுக்காக பெற்றோரை உதறித் தள்ளிய ஷிரத்தா, மும்பையின் வாசி பகுதியில் அஃப்தாப் உடன் தனி வீட்டில் வாழத் தொடங்கினார். மும்பையில் வசித்தால் பெற்றோர், உறவினர்கள் தொந்தரவு செய்வார்கள் என்று கருதிய காதலர்கள் யாருக்கும் தெரியாமல் டெல்லிக்கு இடம் பெயர்ந்தனர்.

டெல்லியில் பன்னாட்டு நிறுவனத்தின் கால் சென்டரில் ஷிரத்தா பணியாற்றினார். காதலன் அஃப்தாப் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் சமையல்காரராக வேலை செய்தார். டெல்லியின் மஹரவுலி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் இருவரும் வசித்தனர். திருமணம் செய்யாமல் ‘லிவிங் டுகெதர்’ முறையில் வாழ்ந்த அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டது.

காதலன் அஃப்தாபுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பது ஷிரத்தாவுக்கு தெரியவந்தது. தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு அஃப்தாபிடம் அவர் வற்புறுத்தினார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. நாள்தோறும் இரவில் ஷிரத்தாவை, அஃப்தாப் அடித்து துன்புறுத்தி உள்ளார். கடந்த மே 18-ம் தேதி இரவில் நடந்த சண்டையில் ஷ்ரித்தாவை அஃப்தாப் கொலை செய்தார். பின்னர் தான் அத்தனை கொடூரங்களும் நடந்துள்ளது.

ஷ்ரித்தாவை கொலை செய்து, அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்துள்ளார். நாள்தோறும் நள்ளிரவு 2 மணிக்கு வெளியில் சென்ற அவர், நாய்களுக்கு ஒவ்வொரு துண்டாக வீசி உடல் பாகங்களை அழித்துள்ளார். விரிவாக வாசிக்க > டெல்லி | காதலனுடன் வசித்து வந்த இளம்பெண் 35 துண்டுகளாக வெட்டி கொலை: நாள்தோறும் நாய்களுக்கு உடல் பாகங்களை வீசி அழிப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x