Published : 14 Nov 2022 02:56 PM
Last Updated : 14 Nov 2022 02:56 PM

டெல்லி | இளம்பெண்ணை 35 துண்டுகளாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசிய பயங்கரம்

கொலை செய்யப்பட்ட இளம்பெண் ஷ்ரத்தா | சமூக வலைதளப் படம்

புதுடெல்லி: டெல்லியில் இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சனிக்கிழமை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவருடன் இணைந்து வாழும் உறவில் இருந்த பெண் மாயமானது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகியுள்ளன.

இது குறித்து போலீஸ் தரப்பு கூறும்போது, "26 வயதான ஷ்ரத்தா மும்பையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் கால் சென்டரில் வேலை பார்த்துவந்தார். அவருக்கும் அஃப்தாப் அமீன் பூனாவாலா என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில் ஷ்ரத்தா, அஃப்தாப் உறவை இருவீட்டாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி டெல்லி சென்றனர். டெல்லியில் மெஹ்ராலி நகரில் வாடகைக்கு வீடெடுத்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவருக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டுள்ளது. கடந்த மே 18 ஆம் தேதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது ஷ்ரத்தாவின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார் அஃப்தாப். பின்னர் அவரது சடலத்தை 35 துண்டுகளாக வெட்டியுள்ளார். அதனை வைக்க ஒரு ஃப்ரிட்ஜ் வாங்கியுள்ளார். சடலத்தை வெட்டி ஃப்ரிட்ஜுக்குள் பதுக்கி வைத்தவர். அடுத்த 18 நாட்களில் அதனை வெவ்வேறு இடங்களில் வீசி எறிந்துள்ளார். இதற்காக அன்றாடம் அதிகாலை 2 மணியளவில் அவர் வெளியே சென்று பல்வேறு இடங்களில் சடலத்தின் பாகங்களை வீசியுள்ளார்.

நவம்பர் 8-ஆம் தேதி ஷ்ரத்தாவின் தந்தை டெல்லியில் மகள் வாழ்ந்து வந்த வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீடு பூட்டியிருந்ததால் அவர் மகளைக் காணவில்லை என்று எங்களிடம் புகார் அளித்தார். அதன் பேரில் சனிக்கிழமை அஃப்தாபை கைது செய்தோம். அஃப்தாப் அளித்த வாக்குமூலத்தின்படி உடல் பாகங்களை தேடி வருகிறோம்" என்று தெரிவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x