Published : 02 Nov 2022 07:29 AM
Last Updated : 02 Nov 2022 07:29 AM

2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை; போக்சோவில் முதியவருக்கு ஆயுள் தண்டனை: மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

அரியலூர்: 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரிய லூர் மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அரியலூர் மாவட்டம் கோவி லூர் காலனித் தெருவைச் சேர்ந்த வர் அண்ணாதுரை(57). இவர், கடந்த 28.9.2021 அன்று 8 மற்றும் 4 வயது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின்கீழ் அண்ணா துரையை அரியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம்சாட்டப்பட்ட அண்ணாதுரைக்கு 2 சிறுமிகளை பாலியல் வன் கொடுமை செய்ததற்காக தலா ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். மேலும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண் டும் எனவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ம.ராஜா ஆஜரானார்.

மற்றொரு வழக்கு: புதுக்கோட்டை மாவட்டம் வல் லத்திராகோட்டை அருகே பூவரசக் குடி ஊராட்சி பூமத்தான்பட்டி கிரா மத்தைச் சேர்ந்தவர் சு.முத்துப் பாண்டி(26), கடந்த ஆண்டு 14 வயதுடைய பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த புதுக்கோட்டை மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சத்யா, முத்துப் பாண்டிக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ1.5 லட்சம் அபராதமும், கட்டத் தவறி னால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் யோகமலர் ஆஜரானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x