Published : 07 Oct 2022 05:14 AM
Last Updated : 07 Oct 2022 05:14 AM

ஹைதராபாத்தில் 7 கிலோ தங்க பிஸ்கெட் பறிமுதல்

ஹைதராபாத்: ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில் 7 கிலோ தங்க பிஸ்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று துபாயில் இருந்து வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, சூட்கேஸ்களில் துணிகளுக்கு இடையே 7 கிலோ தங்க பிஸ்கெட்டுகளை மறைத்து எடுத்து வந்த 3 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, தங்க பிஸ்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3.5 கோடி. கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x