கோவை | சிங்கப்பூரில் இருந்து - 5.6 கிலோ தங்கம் கடத்தி வந்த இருவர் கைது

கோவை | சிங்கப்பூரில் இருந்து - 5.6 கிலோ தங்கம் கடத்தி வந்த இருவர் கைது
Updated on
1 min read

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு நேற்று முன்தினம் வந்த விமானத்தில் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் சந்தேகிக்கும் வகையில் காணப்பட்ட பயணி களை சோதனை செய்தனர்.

அப்போது, முகமது அப்சல்(32) என்ற பயணி தங்க செயின்கள், வளையல்களை தனது உடையில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடத்தல் தங்கம் கொண்டு வந்த மற்றொரு பயணியான திருச்சியை சேர்ந்த கிருஷ்ணன்(66) என்பவரும் கைது செய்யப்பட்டார். இருவரிடமிருந்தும் மொத்தம் 5.6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in