பழநியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க, வைர நகைகள் கொள்ளை

பழநியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க, வைர நகைகள் கொள்ளை
Updated on
1 min read

பழநியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்றவர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பழநி அருகே நேதாஜி நகரை சேர்ந்தவர் ரெங்கநாதன் (55). இவர் தனியார் மாட்டுத் தீவன உற்பத்தி நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.

இவர் குடும்பத்துடன் மைசூரு சென்றுவிட்டு நேற்று முன்தினம் மாலை வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 22 பவுன் நகைகள், வைர நகைகள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து ரெங்கநாதன் அளித்த புகாரில் பழநி நகர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in