Published : 25 Sep 2022 04:20 AM
Last Updated : 25 Sep 2022 04:20 AM

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் பறிமுதல்

சென்னை

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமான பயணிகளையும் அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தபோது சென்னையை சேர்ந்த இரண்டு ஆண் பயணிகள் அமெரிக்க டாலர்களை வைத்திருந்தனர்.

அதேபோல், தாய்லாந்து செல்ல வந்த சென்னையை சேர்ந்த ஒருவர் சவுதி அரேபிய ரியால் வைத்திருந்தார். முறையான ஆவணங்கள் இல்லாததால், ரூ.20 லட்சம் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை செய்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x