

புதுச்சேரி: புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் (எ)பாவாடை (30). கூலித்தொழிலாளி யான இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி நகரப் பகுதியில் பிளஸ் 1 படித்து வந்த 16 வயது சிறுமியை கடத்தி, திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, பாவாடையை கைது செய்தனர்.
இந்த வழக்கு புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறுதி விசார ணைக்குப் பிறகு, சதீஷ் சிறுமியைக் கடத்தியதற்காக ஓராண்டுசிறையும், திருமணம் செய்ததற் காக 3 ஆண்டு சிறையும், பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமாக ரூ.3 ஆயிரமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டுமென உத்தரவில் தெரிவித்துள்ளார்.