Published : 26 Aug 2022 04:25 AM
Last Updated : 26 Aug 2022 04:25 AM

அருப்புக்கோட்டை பாலியல் வழக்கு: நீதிமன்றத்தில் 2 பேர் சரண்

விருதுநகர்

பாலியல் வழக்கில் தேடப்பட்ட 2 பேர் விருதுநகர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.

அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் 3 நாட்களுக்கு முன் காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மேலும் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையையும் மர்ம கும்பல் பறித்துச் சென்றது.

இது குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த விஜய் மற்றும் பிரபாகரன் ஆகியோர் விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நேற்று சரணடைந்தனர். அவர்கள் இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவர் நிஷாந்தினி உத்தரவிட்டார்.

இருவரும் விருதுநகர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x